சிபிஐ சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி காரைக்கால் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று காரைக் கால் திருநள்ளாறு சாலை சக்தி டிவிஎஸ் அருகில் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு, புதுவை மாநில விவசாய சங்க செயலாளர் கலியப்பெருமாள் தலைமை வகித்தார். காரைக்கால் நகர செயலாளர் இப்ராஹிம் முன்னி லை வகித்தார். மாநில செயலாளர் முஹமது யூசுப் போராட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தன்னிச்சையாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து, திருநள்ளாறு வீதி, மாதாகோவில் வீதி, பாரதியார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் அரசை கண்டித்து மண் சட்டி ஏந்தி பிச்சை எடுத்தனர். பிச்சை எடுத்த ரூ.560&யை, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு கட்சி மாநில செயலாளர் முஹமது யூசுப் அனுப்பி வைத்தார்.
போராட்டத்தில், கட்சி நிர்வாகிகள் அன்பழகன், வீரவெண்மணி, ஸ்ரீதரன், ராஜா, பிரான்சிஸ், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.