மதுரை: மே 10,11-ல் பாஜக மாநாடு!
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர்ராவ் மதுரையில் செய்தியாளர்களுகு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’மதுரையில் இன்று தொடங்க இருந்த தாமரை சங்கமம் என்ற பாரதீய ஜனதா கட்சியின் 5-வது மாநில மாநாடு மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. எந்த தேதியில் மாநாடு நடத்துவது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன், தேசிய தலைவர் களுடனும் ஆலோசனை நடத்தியபிறகு மாநாட்டு மறுதேதி முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் விவசாயிகள், மீனவர்கள், இலங்கை தமிழர் பிரச்சினை ஆகியற்றில் கவனம் செலுத்த வில்லை. இந்த பிரச்சினைக்கு பாரதீய ஜனதா மாநாட்டில் தீர்வு காண தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மதுரையில் நடைபெறும் மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்’’ என்று கூறினார்.