மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் மதுரை ஆதினம் - நித்தியானந்தா! ரஞ்சிதா மிஸ்ஸிங்!
சனிக்கிழமை நள்ளிரவு மதுரை திரும்பிய மதுரை ஆதினம் மற்றும் நித்தியானந்தா தனது சீடர்களுடன் ஆதின மடத்துக்குள் கட்டப்பட்ட நவீன சொகுசு ஹோட்டலில் தங்கினார்கள். இன்று காலை பத்திரிகையானர்களை சந்தித்த மதுரை ஆதினம், அடுத்த ஆதினமாக தன்னுடைய மடத்துக்கு நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். முறைப்படி வரும் ஜூன் 5ஆம் தேதி இளைய ஆதினமாக பட்டம் சூட்டும் விழா நடைபெறும். ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குகிறார் என்றார்.
பின்னர் நித்தியானந்தாவை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற மதுரை ஆதினம், அவருக்கு கோயிலை சுற்றிக்காட்டினார். பிறகு சிறப்பு பூஜை ஒன்று இருவர் பெயரிலும் செய்தனர்.
சித்திரை திருவிழான்போது, இவர்கள் இருவரும் கோவிலுக்கு வந்ததால், பக்தர்கள் பல இடங்களில் சுதந்திரமாக செல்ல முடியவில்லை. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தனர்.
மதுரை ஆதின மடத்துக்கு வந்த நடிகை ரஞ்சிதா, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரவில்லை.