காயத்துடன் மீட்கப்பட்ட புலி சாவு
வால்பாறை அருகே தோட்டத்தில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட புலி உயிரிழந்தது.
வால்பாறையை அடுத்த உருளிக்கல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ஒருவரது தோட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை புலி ஒன்று காயத்துடன் நடக்க முடியாத நிலையில் காயத்துடன் கிடந்தது.
வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு, அதைக் கூண்டில் அடைத்தனர். பிறகு சிகிச்சை அளிப்பதற்காக மானாம்பள்ளி வனப்பகுதிக்கு அதைக் கொண்டு சென்றனர்.
முதுமலையில் இருந்து வந்த வனத்துறையின் கால்நடை மருத்துவர் கலைவாணன் சிகிச்சை அளித்தார். ஆனால், சனிக்கிழமை காலை 7 மணிக்கு புலி உயிரிழந்தது. சுமார் 10 வயதுள்ள இந்த ஆண் புலி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முள்ளம்பன்றியைத் தின்றுள்ளது. அப்போது அதன் முள் புலியின் இதயப் பகுதியில் குத்தி காயம் அடைந்திருப்பது பரிசோதனையில் தெரிந்தது; இதனால் வேட்டையாட முடியாமல் சோர்வடைந்துள்ளது. மேலும் வயது முதிர்வு காரணமாக புலி இறந்துள்ளது.