போபர்ஸ் வழக்கில் சோனியாவை விசாரிக்க வேண்டும்: சு. சாமி போபர்ஸ் பீரங்கி ஊழல் கசிய காரணமாக இருந்த சுவீடன் நாட்டு ரகசிய நபர் பற்றி 25 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்துள்ளது. சுவீடன் முன்னாள் போலீஸ் துறைத் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ரோம் இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி இப்போது பரபரப்பாகியுள்ளது. போபர்ஸ் ஊழலில் ராஜிவ் காந்தியின் பங்கு பற்றிய புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கூறியதோடு, போபர்ஸ் பேரத்தில் இடைத் தரகராகச் செயல்பட்ட குட்ரோச்சியை காப்பாற்ற இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியேயும் ராஜிவ் தீவிரமாக முயன்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.