சுஷ்மா சுவராஜ்-ராஜபக்சே சந்திப்புக்கு : திருமாவளவன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொ.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’இலங்கை சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜபக்சேவை தனிமையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இது குழுவில் உள்ள பிற உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும். இந்தியாவின் பிரதமர் அல்லது வெளிவிவகாரத் துறை அமைச்சர் போன்ற பொறுப்புகளில் உள்ளவர்கள் இவ்வாறு தனிமையில் சந்திப்பதை ஏற்கலாம்.