நடராஜன் மீது மேலும் ஒரு வழக்கு!
தஞ்சாவூர் பூக்காரத் தெரு அன்புநகரைச் சேர்ந்தவர் ஓய்வுப்பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கராஜன். இவர் தஞ்சாவூர் தாலுகா காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், தஞ்சாவூர் விளார் ரோட்டில் எனக்கு சொந்தமான 22 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் இருந்த மூங்கில், புங்கண் மரங்களை எம்.நடராஜன், அவரது அண்ணன் சாமிநாதன் மற்றும் பலர் பொங்கலின் இயந்திரம் வைத்து மரங்களை அகற்றி சுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர். அப்போது நான் போய் கேட்டபோது, என்னை கொன்றுவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்தனர் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் வேலு, இந்த புகாரை வழக்காக பதிவு செய்துள்ளார். நடராஜன் மீது இது 6வது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.