மாணவர்கள் போர்கொடி : அமைச்சர் விழா ரத்து
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளான அரசு கலைக்கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி, ஆத்தூர் அரசினர் கலைகல்லூரி, மற்றும் அரசு உதவிபெறும் கலைக்கல்லூரிகளில் படிக்கும் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழாக அரசின் இலவச கணினி வழங்கும் விழா நாளை 14.4.2012 சேலம் அரசு கலைக்கல்லூரியில் நடப்பதாகவும், இந்த நிகழ்சி மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் தலைமையில் நடப்பதாகவும், சேலம் மேயர் சவுண்டப்பன், மற்றும் காவல்துறை ஆணையாளர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பு விருதினர்களாக கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு இலவச “லேப்டாப்” வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நாளில் எப்படி நீங்கள் அரசு விழாவை நடத்தலாம் என்று கேட்டுள்ளனர். அம்பேத்கார் பிறந்தநாளில் நீங்கள் விழா நடத்தினால் எங்களால் எப்படி அம்பேத்காரின் பிறந்தநாளை கொண்டாட முடியும்...? திட்டமிட்டு நீங்கள் இந்த விழாவை நடத்தி “தலித்” மாணவர்கள் அம்பேத்கரின் பிறந்த நாளை கொண்டாடவிடாமல் சதி செய்கிறீர்கள் என்று கூறியுள்ளனர்.
வித்தியாசமான இந்த பிரச்சனையை கண்டு மிரண்டு போன மாவட்ட நிர்வாகம் காரணம் கூறாமலே அமைச்சர் கலந்து கொள்ளும் இலவச ”லேப்-டாப்” வழங்கும் விழாவை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து விட்டனர். இதனால், ஒவொரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 700 கணினிகள் வீதம் வழங்க தயார் நிலையில் இருந்த அனைத்து கணினிகளும் இப்போது தனியாக ஒரு அறையில் வைத்து பூட்டி காவல் இருக்கிறார்கள் அதிகாரிகள்.