ஜெ., மீதான வழக்கு : மே 8க்கு ஒத்திவைப்பு
முதல்வர் ஜெயலலிதா கடந்த, 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறி புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதற்கிடையில் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என, முதல்வர் ஜெ., சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினார். இதனால் இந்த வழக்கு இதுவரை, 38 முறைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஈஸ்வர மூர்த்தி (பொறுப்பு), இந்த வழக்கை வரும் மே மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.