புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணியை இப்போதே துவங்கிவிட்டது அதிமுக ( படங்கள் ) புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1 ந் தேதி அன்னவாசல் அருகே கார் விபத்தில் பலியானார். அவர் இறந்து 8 நாட்கள் ஆகும் முன்பே அ.தி.மு.க இடைத்தேர்தல் பணியை தொடங்கி விட்டது. 8 ந் தேதி 5 அமைச்சர்களை கொண்டு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.
ஆலங்குடி தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு வழங்கவதற்காக வட்டாட்சியர் வீட்டில் இறக்கி வைக்கப்பட்டிருந்த விலையில்லா பொருட்களை நேற்ற இரவு 3 லாரிகளில் ஏற்றிச் சென்றனர். மிஞ்சிய பொருட்களை இன்று காலை லாரியில் ஏற்றி புதுக்கோட்டை தொகுதியில் உள்ள வாணக்கன்காடு கிராமத்திற்கு கொண்டு செல்கின்றனர். விலையில்லா பொருட்களை லாரிகளில் ஏற்றுவதை படம் எடுக்கும் போது லோடு மேன்கள் பதுங்கி கொள்கின்றனர். இனி மேல் நமக்கு எப்ப கொடுப்பாங்க விலையில்லா பொருட்களை என்ற புலம்பிக் கொண்டிருக்கின்றனர் ஆலங்குடி மற்றும் 4 தொகுதி மக்கள்.
படம், செய்தி : இரா. பகத்சிங்