சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே பதியலாம்!
சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே பதியலாம். 25 நாட்கள் காத்திருக்க தேவை இல்லை என இண்டேன் மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இண்டேன் மண்டல மேலாளர் முரளி, ’’கியாஸ் பதிவு செய்ய தற்போது ஐ.வி.ஆர்.எஸ். முறையில் எஸ்.எம்.எஸ். அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆங்கிலத்தில் ஐ.ஓ.சி. என்று டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு அந்தந்த வினியோ கஸ்தரின் போன் நம்பரை டைப் செய்ய வேண்டும்.
பின்னர் வாடிக்கையாளரின் நுகர்வோர் எண் ஆகியவற்றுடன் தனது மொபைல் போனில் இருந்து 8124024365 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த எண்ணில் 24 மணி நேரமும் எல்லா நாட்களிலும் பதியலாம். இதற்கு முன்பு சிலிண்டர் வந்த 21 நாட்களுக்கு பின்தான் வினியோகஸ்தரின் கம்ப்யூட்டரில் பதிய முடியும்.
ஆனால் ஐ.வி.ஆர்.எஸ். முறையில் வாடிக் கையாளர்கள் சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே அடுத்த சிலிண்டருக்கு பதியலாம். இப்புதிய முறையால் கியாஸ் ஏஜென்சி நிறுவனங்களில் பதிய மறுக்கின்றனர் என்ற புகார் வராது.
தற்போது வாடிக்கையாளர் பதிவு செய்தபின் 30 முதல் 45 நாட்கள் வரை காலதாமதம் ஆகிறது. இந்த இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறியுள்ளார்.