குற்றாலத்தில் குளிக்கத் தடை நீங்கியது
குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பேரருவியில் இரவில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நள்ளிரவில் தண்ணீரின் சீற்றம் குறைந்ததையடுத்து பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றாலம் ஐந்தருவியில் நான்கு கிளைகளில் தண்ணீர் சிறிதளவு விழுகிறது. இதிலும் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.