மா.கம்யூ., கட்சியின் பொது செயலாளராக பிரகாஷ் காரத் 3வது முறையாக தேர்வு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக பிரகாஷ் காரத் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து இரண்டாது முறையாக அப்பதவியில் நீடித்தார்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் அக்கட்சியின் 20வது கட்சி மாநாடு நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பிரகாஷ் காரத்தை மூன்றாவது முறையாக பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அக்கட்சியின் மத்தியக் குழுவில் இந்த முடிவுக்கு ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.