எட்டாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த வெள்ளாள குண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன். கூலி தொழிலாளி. இவரது 13 வயது மகள் பெயர் வசந்தி. அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மாணவி தனது வீட்டுக்கு தெருவின் வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தபோது அன்பு என்ற பங்காருசாமி (வயது 26) என்ற வாலிபர் மாணவியை தன் வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு போய் வாயை பொத்தினார். அவரது பிடியில் இருந்து மாணவி தப்பிக்க முயன்றார். ஆனால் அவனது உடும்பு பிடியில் இருந்து அவளால் தப்பமுடியவில்லை.
பின்னர் அந்த வாலிபர் மாணவியின் கைகளை கட்டிலில் கட்டி விட்டு நிர்வாணமாக்கி கற்பழித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு மாணவியை விட்டு விட்டார்.
இது பற்றி மாணவியே வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் சுரேஸ்குமார் வசந்தியின் புகாரை பெற்றுகொண்டு விசாரணை நடத்தியுள்ளார்.
இதற்கிடையில் சம்மந்தப்பட்ட நால்வரும் தலைமறைவாகிவிட்டனர். நேற்று மாலை இந்த நால்வரையும் வெள்ளாள குண்டம் அருகில் உள்ள மலைபகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த மலைபகுதியில் சென்று மாணவி வசந்தியை கற்பழித்த காமக்கொடூரன் அன்பு என்ற பங்காருசாமி மற்றும் நால்வரையும் கைது செய்தனர்.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அன்பு மீதும், மாணவியின் பெற்றோரை மிரட்டியதாக அன்பு மற்றும் அவரது பெற்றோர் கந்தசாமி-சம்பூரணம், மணி ஆகிய 3 பேரும் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளார்.