குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை
மதுரை அருகே வடபழஞ்சியில், சொத்துப் பிரச்னையில் தனது 2 குழந்தைகளையும் கொலை செய்து, கிணற்றில் வீசிய தந்தை உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடபழஞ்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருப்பதி,28. மனைவி கனகவள்ளி. இவர்களது மகன் ஸ்ரீகரன்,7, மகள் ஸ்ரீஹரிணி,5. இருவரும் அங்குள்ள, ஒரு பள்ளியில் யு.கே.ஜி., மற்றும் எல்.கே.ஜி., படித்து வந்தனர். திருப்பதியின் நடவடிக்கை சரியில்லை எனக் கருதிய அவரது தந்தை பாலு, சொத்துக்களை திருப்பதியின் மகன் (பேரன்) ஸ்ரீகரன் பெயருக்கு எழுதி வைத்தார்.
சந்தேகமடைந்து, திருப்பதியை நாகமலை புதுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், சொத்துக்களை ஸ்ரீகரன் பெயருக்கு மாறிய ஆத்திரத்தில் திருப்பதி, தனது சித்தப்பா மகன் பெரியகருப்பன்,24, துணையுடன் மகன் ஸ்ரீகரன், மகள் ஸ்ரீஹரிணியை கழுத்தை நெரித்து கொலை செய்து, கிணற்றில் வீசிவிட்டு, எவ்வித சலனமுமின்றி ஆட்டோ ஓட்டச் சென்றது தெரிய வந்தது.
இரவு 8.30 மணிக்கு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். திடீர்நகர் தீயணைப்பு படையினர் உதவியுடன் கிணற்றில் இருந்த குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டது. திருப்பதி, பெரியகருப்பனை போலீசார் கைது செய்தனர்.