கே.என். நேருவுக்கு ப.சிதம்பரம் ஆறுதல்
முன்னாள் தி.மு.க. அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29.03.2012 மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக, தனிப்படை போலீசார் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே கே.என். நேருவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று (07.04.2012) திருச்சி வந்தார். அவர் கே.என். நேரு வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் மேயர் சுஜாதா, மாவட்ட காங்கிரஸ் சேவா தள துணை தலைவர்கள் வரகனேரி மகேந்திரன், இக்பால், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்றனர்.