நகைக்கடைக்காரர்கள் மறியல்: போலீஸ் தடியடி
கடந்த மார்ச் 16ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தஙக நகைகளுக்கு உற்பத்தி வரி விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நகை கடை உரிமையாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (03.04.2012) குஜராத்தில் உள்ள நகை கடை உரிமையாளர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்க, போலீசார் தடியடி நடத்தினர். இதில் நகை கடை உரிமையாளர்கள் பலர் காயம் அடைந்தனர்.