5 ல்கண்டன ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள்பெரும்அதிர்ச்சியினால் நிலைகுலைந்து போயுள்ளனர். மின்சார ஒழுங்குமுறைஆணையம் மக்களின் கருத்துகளைக் கேட்டபின்னரே இந்த கட்டண உயர்வைஅறிவித்திருப்பதாக தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கமுயற்சிப்பதும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கும்தொடர்பில்லாததைப் போல கூறி, பொதுமக்களை ஏமாளிகளாக்க நிலைப்பதும்வேடிக்கையாகவுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இதரபெரும் தொழில் நிறுவனங்களுக்கும் மலிவுவிலையில் மின்சாரம் வழங்குகிறது. அதுவும் கூடுதல் விலைக்கு மின்சாரத்தைவாங்கி அந்நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும்தமிழக அரசு, ஏழை-எளிய மக்களின் தலையில் இடிவிழுந்ததைப்போன்ற அறிவிப்பைச்செய்துள்ளது. ஏற்கனவே, பேருந்து கட்டணஉயர்வு, பால்விலை உயர்வுஆகியவற்றால் தாங்க முடியாத அளவில் அல்லல்படும் அடித்தட்டு மக்களின்அடிவயிறுபற்றி எரியும்வகையில் மேலும் மின்கட்டணத்தை உயர்த்திருப்பதுகண்டனத்திற்குரியதாகும்.
மிக்சி,க்ரைன்டர் போன்றவற்றை இலவசமாக வழங்கும் தமிழக அரசு, அவற்றைபயன்படுத்த இயலாதவகையில் மின்கட்டணத்தை உயர்த்திருப்பது வாக்களித்தமக்களைத் தண்டிப்பதாகவே அமைந்துள்ளது. இனி சாதாரணமக்கள் கடந்த காலங்களில்பயன்படுத்தியதைப்போல மண்ணெண்ணெய் விளக்குகளையே வீடுகளில் பயன்படுத்தும்நிலைக்குத் தள்ளப்படலாம். தமிழகம் மெல்ல மெல்ல இருண்ட தமிழகமாகமாறிவருகிறது.
இந்நிலையிலிருந்து தமிழகத்தைக்காப்பாற்ற, கட்டண உயர்வுசுமைகளிலிருந்து மக்களைமீட்க, தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணஉயர்வை முழுமையாகத் தமிழக அரசு திரும்பபெறவேண்டும் இக்கோரிக்கையைவலியுறுத்தி எதிர்வரும் 05.04.2012 அன்று அனைத்துமாவட்டத்தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.