வங்கி லாக்கரில் 150 பவுன் நகை மாயம்!
திருப்பூரில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் தங்க நகையைக் காணவில்லை என, போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் கே.பி.என். காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராம்பிரபு (32). பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், திருப்பூர் நீதிமன்றம் சாலை வாலிபாளையத்தில் உள்ள வங்கியின் லாக்கரில், தனக்குச் சொந்தமான 150 பவுன் தங்க நகைகளை கடந்தாண்டு ஜூலை 21 ம் தேதி வைத்தாராம்.
இந் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, லாக்கரில் இருந்த நகைகளை எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார் ராம்பிரபு. அங்கு லாக்கரைத் திறந்து பார்த்தபோது நகைகள் இல்லாததால், வங்கி மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், போலீஸில் புகார் செய்தார். திருப்பூர் வடக்குப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.