2 வயது குழந்தை, தாயுடன் பெண் தற்கொலை:
குழந்தையை விட்டுச்செல்ல மனமில்லை என கடிதம்
சேலம் ஐந்து ரோட்டிலிருந்து பெங்களூர் செல்லும் சாலையில் உள்ளது நரசோதிப்பட்டி. இந்த பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி வயது 55. இவரது கணவர் கனகராஜ். கனகராஜ் ஓய்வு பெற்ற ஆர்.டி.ஒ. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்து விட்டார்.
இவர்களுக்கு திலக், சதீஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திலக் கேரளாவில் மருத்துவராக உள்ளார். சதீஸ் ஈரோட்டில் போக்குவரத்து துறையில் வேலை பார்த்துவருகிறார்.
ஒரே மகள் கிருத்திகா வயது 27, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கிருத்திகாவுக்கும் சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த வசந்த் என்பவருக்கும் திருமணம் நடந்தது. வசந்த் கிருத்திகா தம்பதியினருக்கு அம்மு என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது.
வசந்த் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் சென்னையில் வேலை பார்ப்பதால் அவர் மட்டும் சென்னையில் தங்கியுள்ளார். தவிர வசந்த்துக்கும், கிருத்திகாவுக்கும் குடும்ப பிரச்சனை இருப்பதால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். கிருத்திகா தனது குழந்தையுடன், சேலத்தில் உள்ள அவரது தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.
நேற்று சேலம் மாநகர துணை போலிஸ் ஆணையாளர் பாபுவுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது, அதில் நாங்கள் சுடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்கிறோம் என்று கிருத்திக்கா அந்த கடித்ததில் எழுதியிருந்தார்.
உடனடியாக சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை அந்த வீட்டுக்கு சென்று பார்க்கும் படி துணை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கே கிருத்திகாவின் வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே வீட்டின் கதவை உடைத்து திறந்து கொண்டு உள்ளே சென்ற போலீசார் பார்த்த போது மகேஸ்வரி தனியாக தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.
கிருத்திகா தனது மகள் அம்முவை அனைத்து கழுத்தோடு கட்டி பிடித்தபடி தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவர் முதலில் குழந்தை அம்முவின் கழுத்தை இறுக்கி விட்டு பின்னர் தனது கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
இதைப்பார்த்ததும் பக்கத்தில் இருந்த அனைவரின் மனதும் பதைபதைத்க்கும் படி இருந்தது. கொடுமையான காட்சியை கண்ட அனைவரும் உருக்கமாக இருந்தனர்.
இவர்கள் 3 பேர் தற்கொலைக்கு காரணம் என்ன என்று போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்திய போது, தங்கள் திருப்பதிக்கு செல்கிறோம் திரும்பி வர நான்கு நாட்கள் ஆகும் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லியுள்ளார் கிருத்திகா.
வீட்டில் இருந்த ஏர் கண்டிஷனர் போட்டுவிட்டிருந்ததால், தற்கொலை செய்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தாலும் அவர்களின் உடல் கெட்டுவிடாமல் இருந்தது. அதுதவிர வீட்டில் இருந்து கிருத்திகா கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியுள்ளது.
அதில், எங்கள் தற்கொலைக்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்று குறிப்பிட்டு இருப்பதாக தெரிகிறது.
மேலும், அந்த கடிதத்தில் என்னை எனது கணவர் பலவகையிலும் கொடுமை செய்தனர். அந்த வலியை என்னால் தாங்கமுடியவில்லை. அதனால்தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
என்னுடைய குழந்தையை கொல்ல எனக்கு மனம் இல்லை. ஆனாலும், என் குழந்தையை விட்டு விட்டு சென்றால் அதுவும் என்னைப்போல சித்ரவதைக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளாகி விடும் என்பதால் என்னோடு அந்த குழந்தையையும் கூட்டிகொண்டு செல்கிறேன் என்று எழுதியுள்ளார்.
எனது சொத்துக்கள் அனைத்தும் எனது பெரியம்மா மகன் மோகனுக்கு தான் கொடுக்க வேண்டும். மேலும், எங்களது இறுதிச் சடங்குக்கு தேவையான பணத்தை நான் பூஜை அறையில் வைத்து உள்ளோன் அதை எடுத்து செலவு செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதே போல் சேலம் நகர போலீஸ் கமிஷனருக்கும் கிருத்திகா ஒரு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்துகொண்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.