அறிவுரை தேவையில்லை: ராஜபக்சே கொக்கரிப்பு
மறுசீரமைப்பின் மூலம் இலங்கை அமைதிப்பாதையில் திரும்பி வருகிறது என்றும், தங்களுக்கு எந்தவொரு நாட்டின் அறிவுரையும் தேவையில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
தலைநகர் கொழும்புவில் எக்ஸ்போ 2012 என்ற நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ராஜபக்சே கூறியதாவது, மறுசீரமைப்பின் மூலம், இலங்கை மெல்ல மெல்ல அமைதிப் பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. மற்ற நாடுகளின் தலையீடுகளின் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுவதாக கருதுகிறோம். எனவே, தங்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதி உள்ளிட்ட விவகாரங்களில் மற்ற நாடுகளின் அறிவுரைகள் தங்களுக்கு தேவையில்லை என்று அவர் கூறினார்.