சசிகலா பெங்களூரு பயணம்!
சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதற்காக சசிகலா தனது சகாக்களுடன் விமானத்தில் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார்.
என் வாழ்க்கையை ஏற்கனவே ஜெயலலிதாவிற்காக அர்ப்பணித்துவிட்டேன் என்று புதன்கிழமை காலை அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா, இளவரசி, அசோகன், தண்டபாணி, ராஜராஜன், மணிசங்கர் ஆகியோருடன் இரவு 8 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து, விமானத்தில் பெங்களூருவுக்கு சென்றார்.. பெங்களூரு கோர்ட்டில் சசிகலா ஆஜர் ஆவார் என தெரிகிறது.