தற்கொலை தீர்வாகாது: ஆந்திர முதல்வர்
தெலங்கானா பிரச்னைக்காக தீக்குளிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது என்று கூறியுள்ளார்.
தெலங்கானா பிரச்னைக்காக கடந்த 4 நாட்களில் 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர். மாணவர் ஒருவரும், ஆட்டோ ரிக்ஷா டிரைவர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டது தெலங்கானா பிரச்னையை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்களை குறிப்பிட்டுப் பேசிய கிரண்குமார் ரெட்டி, எந்த பிரச்னைக்கும் தற்கொலைகள் தீர்வாக முடியாது என்றார்.