காரில் ஜாலியாக இருந்த கல்லூரி ஜோடி: உல்லாசத்தக்கு அழைத்த வாலிபர்: பொதுமக்களால் தப்பித்தனர்
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் காதலர்களின் சல்லாபம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நடைபயிற்சிக்கு செல்லும் ஆண், பெண்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு காதல் ஜோடிகள் நடந்து கொள்கிறார்கள். போலீசாரும் இந்த ஜோடிகளை விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை. தற்போது காதல்ஜோடிகள் காருக்குள் லீலை நடத்தும் அளவுக்கு நிலவரம் மோசமாகிக்கொண்டு இருக்கிறது.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படிக்கும் ஒரு மாணவரும், மகளிர் கல்லூரியில் பி.காம் படிக்கும் ஒரு மாணவியும் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு இரவு 7 30 மணியளவில் காரில் வந்தனர்.
கேரளாவை சேர்ந்த அந்த மாணவியும், கோவையை சேர்ந்த அந்த மாணவரும் ரோட்டின் ஓரமாக காரை நிறுத்தி காரின் முன்பக்க சீட்டில் அமர்ந்து காதல் லீலையில் ஈடுபட்டனர். இதனை அந்த பகுதியில் நின்ற ஒரு என்ஜினீயரிங் கல்லூரி மாணவரும், அவருடைய நண்பரும் பார்த்தனர். குடிபோதையில் இந்த அவர்கள் காரில் இருந்த ஜோடியை பார்த்து சபலம் அடைந்தனர்.
சிறிது நேரத்தில் அவர்கள், அந்த காருக்கு அருகே சென்றனர். மாணவியுடன் இருந்த மாணவரை தாக்கி மிரட்டினர். பின்னர் அந்த மாணவியை தங்களுடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பின்பக்க சீட்டுக்கு செல்வதுபோல் கீழே இறங்கி திருடன்...திருடன் என்று கத்தினார்.
இதைத்தொடர்ந்து போதையில் இருந்த என்ஜினீயரிங் மாணவரும், அவருடைய நண்பரும் தப்பி ஓட முயன்றனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்ற ஆட்டோ டிரைவர்கள், நடைபயிற்சிக்காக சென்றவர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் அங்கு வந்தனர். மாணவியை செக்சுக்கு அழைத்த 2 பேரையும் பிடிக்க முயன்றனர். காருக்குள் லீலையில் ஈடுபட்ட மாணவியையும், மாணவரையும் கண்டித்தனர். பொதுமக்களின் பிடியில் மாணவியை மிரட்டிய என்ஜினீயரிங் மாணவர் மட்டும் சிக்கினார். அவருடைய நண்பர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட மாணவருக்கு பொதுமக்கள் தர்ம அடிகொடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். காருக்குள் லீலையில் ஈடுபட்ட மாணவரையும், மாணவியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.
3 பேரின் பெற்றோரையும் அழைத்து போலீசார் எச்சரித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவரும், மாணவியும் புகாராக எழுதி கொடுத்தனர். என்ஜினீயரிங் மாணவரும் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார். மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவர்களை போலீஸ் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினார்கள்.
கோவையில் கடந்த 2008 ம் ஆண்டு ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒரு மாணவியும், வாலிபரும் காதல் லீலையில் ஈடுபட்டதை பார்த்த, பிரபல ரவுடி அந்த மாணவியை மிரட்டி காருடன் கடத்திச்சென்றான். சூலூரில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்து, படம் எடுத்து மிரட்டிய சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக ரவுடி மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டான்.
தற்போதும் பொதுமக்கள் யாரும் தடுக்காமல் இருந்திருந்தால், இந்த மாணவிக்கும் இதுபோன்ற கதி ஏற்பட்டு இருக்கும். எனவே ரேஸ்கோர்ஸ் பகுதியில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தொடர்ந்து இந்த பகுதியில் போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் இது போல சல்லாபத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.