மார்ச் 31 இரவு முதல் பெட்ரோல் விலை உயருகிறது?
பெட்ரோல் விலை வரும் 31.0-3.2012 அன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுகிறது. லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை உயர்வு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிர்ணயத்திற்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதால் பெட்ரோல் விலை உயர்வு தள்ளிவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி இன்று (27.03.2012) மாலையுடன் முடிவடைகிறது. இதையடுத்து 31.0-3.2012 அன்று நள்ளிரவு முதல் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை உயர்வு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.