திவாகரனை ஏப்ரல் 9 காவலில் வைக்க மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவு
சசிகலா தம்பி மன்னார்குடி திவாகரன் மீது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ரிஷியூர் கஸ்தூரி என்பவர் வீட்டை இடித்த வழக்கில் திவாகரன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மேலும் சில வழக்குகள் பதிவாகி உள்ளது. இதுவரை 4 வழக்குகள் திவாகரன் மீது பதிவு செய்யப்பட்டு 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தார். இன்னும் ஒரு வழக்கில் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளார்.
இந்த நிலையில் திருவாரூர் நில அபகரிப்பு பிரிவில் திவாகரன் மற்றும் மிடாஸ் மோகன் என்கிற அடையாறு மோகன் ஆகியோர் மீது மன்னார்குடி பட்டுக்கோட்டை சாலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தங்களது ரியல் எஸ்டேட்டுக்கு போக பாதை எடுத்துள்ளனர் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திவாகரனுக்கு 5வது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பாக மன்னார்கு நீதிமன்றத்தில் திவாகரன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ஐயப்பன்பிள்ளை 09.04.2012 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திவாகரன் திருச்சி சிறைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.