நடிகை மனோரமா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா, கடந்த சில வருடங்களாக மூட்டு வலியினால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, கடந்த வருடம் அவருக்கு `ஆபரேஷன்' நடந்தது. ஆபரேஷனுக்குப்பின், அவர் குணம் அடைந்தார்.
இதற்காக அவருக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், `ஆபரேஷன் நடந்தது. 45 நாட்கள் அவர் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அதன்பிறகு வீடு திரும்பிய அவர், ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று அவருக்கு மீண்டும் மூட்டு வலி ஏற்பட்டது. வலி அதிகமாக இருந்ததால், மனோரமா சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.