ரஜினிகாந்த் இன்று லண்டன் பயணம்
`எந்திரன்' படத்தை அடுத்து ரஜினிகாந்த், `ராணா' என்ற படத்தில் நடிப்பதாக இருந்தார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த படம் தள்ளிப்போடப்பட்டது. அதற்கு பதில், `கோச்சடையான்' என்ற புதிய படத்தை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
`கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா டைரக்டு செய்கிறார். டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் கவனிக்கிறார்.
அவருடன் மகள் சவுந்தர்யா, டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் 20 பேர்களும் லண்டன் போகிறார்கள்.
`கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், நாசர், ஜாக்கி ஷராப், ரமேஷ்கண்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுக்கும் லண்டன் செல்வதற்கு டிக்கெட் போடப்பட்டுள்ளது.
லண்டனில் ஏப்ரல் 6-ந் தேதி வரை, `கோச்சடையான்' படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ஏப்ரல் 7-ந் தேதி ரஜினிகாந்த் சென்னை திரும்புவார்.