மோடிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு உண்டு என்று கூறி அவருக்கு எதிராக நியுயார்க்கில் 40 இந்திய- அமெரிக்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குஜராத் வன்முறைச் சம்பவங்களின் 10-வது ஆண்டுதினத்தை குறிக்கும்வகையில் அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற பதாகைகளுடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் மன்ஹாட் டனில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகே சனிக்கிழமையன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட் டவர்களும் கலந்துகொண்டனர்.