வைகோ ஊரில் அதிமுக தேர்தல் அலுவலகம்சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிகவோடு மதிமுகவும் போட்டியிடுகிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.வின் சொந்த ஊரான கலிங்கபட்டி சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு அதிமுக., தேர்தல் அலுவலகம் இல்லை.
இந்நிலையில் தொகுதி பொறுப்பாளர் அமைச்சர் சின்னசாமி, ராஜபாளையம் எம்.எல்.ஏ.,கோபால்சாமி, முன்னாள் அமைச்சர் இன்பதமிழன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,சந்திரா ஆகியோர் மேற்பார் வையில் இரவோடு இரவாக தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
கலிங்கபட்டியில், அதிமுக., தேர்தல் அலுவலகம் நாளை (மார்ச் 3ம் தேதி) காலையில், அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் தலை மையில் திறக்க இருப்பதாக கட்சியினர் தகவல்கள் தெரிவித்தனர்.