சென்னை மாணவன் கடத்தலில் பிடிபட்ட வடமாநில சகோதரர்களின் தந்தை 5 பேரை சுட்டுக் கொன்றவர்
சென்னை: எம்.கே.பி. நகரில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவன் மீட்கப்பட்டான். இது தொடர்பாக கல்லூரி மாணவர், உ.பி. வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவனை கடத்தியதாக கைதான 4 பேரில் 2 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அண்ணன் தம்பி ஆவர். இவர்களிடம் இருந்து 5 கள்ளத்துப்பாக்கிகள், 43 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் துப்பாக்கிகள் சிக்கியதால் சென்னையில் இதற்கு முன் வேறு ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா? என்று விசாரணை நடக்கிறது. வட மாநில வாலிபர்களின் தந்தை அகமது கான் இவர் உ.பி.யில் தனது தம்பியை கொலை செய்த 5 பேரை சுட்டுக் கொன்று பழி வாங்கினார். இந்த வழக்கில் அகமது கான் உ.பி.ஜெயிலில் இருக்கிறார். அவர் தனது மகன்களை பாதுகாப்புக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. எனவே அவருக்கும் இதில் தொடர்பு உண்டா என்று போலீசார் விசாரிக்கிறார்கள். மீட்கப்பட்ட மாணவனிடம் போலீசார் தனியாக வைத்து கடத்தல் கும்பல் பற்றி விசாரித்தனர்.