என்கவுண்டர்:போலீஸ் கமிஷனருக்கு போஸ்டர்
சென்னையில் கடந்த வியாழக்கிழமை அன்று அதிகாலை வங்கி கொள்ளையர்கள் 5 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் போலீசாருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. சென்னை நகை வியாபாரிகள் சங்கத்தினர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, எக்ஸ் னோரா அமைப்பின் தலைவர் நிர்மல், பர்மாபஜார் வியாபாரிகள் சங்க தலைவர் காதர்மொய்தீன், கோயம்பேடு வியாபாரிகள் சங்க தலைவர் விஜய்பாப்னா, ஆகியோர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
இதோடு நேற்று சென்னை நகரின் பல்வேறு இடங்களில் கமிஷனரை பாராட்டி போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருந்தது. கமிஷனரை சந்தித்து பாராட்டு தெரிவித்த பொதுமக்கள், அடுத்து செயின் பறிப்பு கொள்ளையர் களையும், சுட்டுத்தள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.