நரேந்திரமோடியின் 33வது உண்ணாவிரதம் குஜராத் கலவர வழக்கில் இருந்து முதல் மந்திரி நரேந்திரமோடியை விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த நரேந்திரமோடி சமய நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தி சத்பவனா மிஷன்” என்ற பெயரில் உண்ணாவிரதம் இருந்தார். செப்டம்பர் மாதம் 17 ந்தேதி ஆமதாபாத்தில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இதற்கு நாடு முழுவதும் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய நகரங்களிலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். அதன்படி நரேந்திரமோடி முக்கிய நகரங்களில் 32 முறை உண்ணாவிரதம் மேற்கொண்டார். 12.02.2012ல் அவர் 33 வது முறையாக வடக்கு குஜராத்தில் உள்ள அம்பாஜி நகரில் உண்ணாவிரதம் இருந்தார். இத்துடன் அவரது சரத் பவனா மிஷன் உண்ணாவிரதம் நிறைவு பெற்றது. உண்ணாவிரதத்தில் சமுதாய தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் பங்கேற்று நரேந்திர மோடியை வாழ்த்தினர்.