சத்தியமூர்த்திபவனில் காங்கிரசார் கொண்டாட்டம்
ஐ.மு., கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹமீது அன்சாரி வெற்றி பெற்றதை தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரசார் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
துணை ஜனாதிபதி தேர்தலில் ஜ.மு., கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் ஹமீது அன்சாரியும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜஸ்வந்த்சிங்கும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில், 252 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஹமீது அன்சாரி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். அவரது வெற்றியை கொண்டாடும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் காங்கிரசார் பட்டாசு வெடித்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி, தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.