போலி மருத்துவர்கள் 2 பேர் கைது சேலம் மாவட்டத்தில் 9 மற்றும் 10ம் வகுப்பே படித்துள்ள போலி மருத்துவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10ம் வகுப்பு படித்துள்ள ரத்தினவேலு வீராணத்தில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். சிவக்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ரத்தினவேலுவை கைது செய்தனர். 9ம் வகுப்பு படித்த சின்னசாமி 3 ஆண்டாக பல்மருத்துவம் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.