துணை ஜனாதிபதி தேர்தல்! பிரகாஷ் கராத்துடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை!
துணை ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங், தன்னுடன் ஆலோசனை நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, 3 நாட்களுக்கு முன், தொலைபேசியில் தன்னை தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து கேட்டதாகவும், இவ்விவகாரத்தில் தங்களது கட்சி கருத்து தெளிவாக அவருக்கு விளக்கப்பட்டதாக கூறினார்.
இந்த உரையாடலில், துணை ஜனாதிபதி பதவிக்கு பல்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஹமீத் அன்சாரியையே, மீண்டும் துணை ஜனாதிபதியாக நியமிக்க காங்கிரஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரகாஷ் காரத் உடனான பிரதமரின் உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.