கே.ரோசய்யா - கிரண்குமார் ரெட்டி சந்திப்பு
தமிழக கவர்னர் கே.ரோசய்யாவை, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி சந்தித்துப் பேசினார். ஐதராபாத்தில் தங்கியிருந்த ரோசய்யாவை, அவரது வீட்டில் சந்தித்த கிரண்குமார் ரெட்டி, ஒரு மணி நேரம் தங்கியிருந்து பேசினார். ஆந்திராவில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து, இருவரும் ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக, அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.