எம்.எல்.ஏக்களுக்கு கார் வாங்க அனுமதி-நிபந்தனை
சொந்தமாக கார் இல்லாத எ.எல்.ஏக்கள் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கார் வாங்கி கொள்ளலாம் என்று உத்திர பிரதேச முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
மேலும் காரின் மதிப்பு 20 லட்சத்துக்குள்ளாக இருக்க வேண்டும் என்றும், 5 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப ஒப்படைத்து விட வேண்டும் அல்லது அவர்களே அந்த காரை சொந்தமாக வாங்கிகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கும் தொகுதி வளர்ச்சி நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கப்படுகிறது என்பது குறிப் பிடத்தக்கது.