ஜீவனாம்சம் விவகாரம் : பிரபல நடிகரின் சொத்துக்களை
ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு
பிரபல இந்தி நடிகர் ரகுபீர் யாதவ். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக ரகுபீர் யாதவ் தனது மனைவியை 1995-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
விவாகரத்தான மனைவிக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரமும், தற்போது மைனராக இருக்கும் அவர்களது மகன் மேஜர் ஆகும் வரை மாதந்தோறும் ரூ.20 ஆயிரமும் ரகுபீர் யாதவ் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
ஜீவனாம்சம் கொடுக்க மறுத்ததால் கடந்த மார்ச் மாதம் ரகுபீர் யாதவின் சொத்துக்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையை கோர்ட்டு தொடங்கியது. அதனால் அவர் பூர்ணிமாவுக்கு ரூ.3 லட்சம் ஜீவனாம்சம் வழங்கினார். பிறகு அவர் ஜீவனாம்சம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். தற்போது ரூ.10 லட்சம் அளவுக்கு ஜீவனாம்சத் தொகை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் ரகுபீர் யாதவ் மீது பூர்ணிமா மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி மோனிகா சரோகா ரகுபீர் யாதவின் சொத்துக்களை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.