மதுரை அருகே மோதல்: போலீஸ் தடியடி
மதுரை அருகே கடைகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்களை, காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
வாடிப்பட்டியில் நேற்று இருபிரிவிக்கு இடையே நடந்த மோதலில், 5 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதையடுத்து கலவரத்தில் ஈபட்டவர்களை கைது செய்யக் கோரி, ஒரு பிரிவினர் இன்று வாடிப்பட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடைகள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருதரப்பு மோதல் சம்பவம் குறித்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.