கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது
ராமநாதபுரத்தில் லட்சக் கணக்கில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்றில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்கு பின் தவறான தகவல்களை அளித்ததன் பேரில், ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் லஞ்சக்கணக்கில் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோவில் வந்த ஏர்வாடியைச் சேர்ந்த சையது முகமது, கீழக்கரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் சையது, சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 1 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளும், 53 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள ஏஜெண்ட் ஒருவரிடம் இருந்து, கள்ளநோட்டுகளை பெற்று இவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் பயன்படுத்திய ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.