ரஜினி படத்திற்கு எதிர்ப்பு: ரிலைன்ஸ் நிறுவனம் வழக்கு
கோவா படத்திற்கு பைனான்ஸ் வாங்கி பிரச்சனையாகி பின்பு சுமூகமாகி படம் ரிலீசாகி ஓடிவிட்டது. இப்படத்தை தயாரித்த ரஜினி மகள் சவுந்தர்யா, முதலில் தயாரித்து இயக்கியது சுல்தான் தி வாரியார்.
இப்போது அந்த படத்திற்கும் பைனான்ஸ் பிரச்சனை வந்திருக்கிது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் சவுந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவும் இணைந்து ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரை தயாரிக்க திட்டமிட்டது.
2008-ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 2009- ஏப்ரலில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படம் இதுவரை வெளிவரவில்லை. தாமதமாவது தொடர்ந்ததால் ஒப்பந்தத்தை முறித்து, படத்திலிருந்து விலகிக் கொண்டது ரிலையன்ஸ்.
இப்போது சுல்தான் படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் சவுந்தர்யா. இதனை அறிந்த ரிலையன்ஸ் உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
அவ்வழக்கு மனுவில், ‘’ பழைய பாக்கியை முடிக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது. உடனடியாக தங்களின் ரூ 11.59 கோடியை 12 சதவிகித வட்டியுடன் திருப்பித் தர வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
வரும் மார்ச் 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.