நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
இது குறித்து இரஷ்யப் பிரதமரின் பேச்சாளர் யூரி உஷாகோவ்,
’’ புதுடெல்லி வரும் புடின், பிரதமர் மன்மோகன் சிங்கை முதலில் சந்தித்துப் பேசுகிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள்.
நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை புடின் சந்திப்பார்.
இந்தப் பயணத்தில் மிக முக்கியமாக, பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கும் விமானதாங்கி போர்க்கப்பல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து ஐந்தாவது தலைமுறை போர் விமானத்தை உருவாக்கவும், பன்முக சண்டை விமானங்களைத் தயாரிக்கவும் வழிவகுக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.
இவைகள் மட்டுமின்றி, முதலீடு, அணு சக்தி. இந்திய மாணவர்களுக்கு இரஷ்யாவில் பயிற்சி ஆகியன குறித்தும் இரு தலைவர்களும் பேசுவார்கள்’’ என்று கூறியுள்ளார்.