Home முதல் பக்கம் நக்கீரன் கோபால்
முக்கிய செய்திகள்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு || ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அரசியலை விட்டு ஒதுக்கப்படுவது உறுதி: நாம் தமிழர் இயக்கம் || லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு || ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி || அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி || அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர் || மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம் || காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு || கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க் || தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு || பா.ஜ., அரசை கவிழ்த்து விட முடியாது: எடியூரப்பா || சுழற்பந்து பயிற்சி அகாடமி தொடங்க அனில் கும்ளே முரளிதரன் திட்டம் || போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது ||
வியாழக்கிழமை, 11, மார்ச் 2010 (20:28 IST)

இங்கிலாந்தை வீழ்த்தியது ஜெர்மனி

டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை ஆக்கி போட்டியின் இரு அரை இறுதி போட்டிகளும் இன்று நடக்கின்றன. இதன் முதல் போட்டியில் ஜெர்மனி- இங்கிலாந்து அணிகள் மோதின.

முதல் அரையிறுதியில், 4-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்ற ஜெர்மனி அணி,  பைனலுக்கு முன்னேறியது. ஆட்டம் துவங்கியது முதலே சிறப்பாக விளையாடிய ஜெர்மனி அணி, முதல் பாதியில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து முன்னிலை வகித்தது.

சுதாரித்து கொண்டு விளையாடிய இங்கிலாந்து ஒரு கோல் அடித்தது. எனினும் மூன்றாவது கோலை அடித்த ஜெர்மனி 3-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில், ஜெர்மனி மேலும் ஒரு கோல் அடித்து, தனது முன்னிலையை தொடர்ந்தது. லீக் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, அரையிறுதியில் சொதப்பியது.

இறுதியில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்று பைனலுக்கு முன்னேறியது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :