தஞ்சாவூரில் எரிசாராய ஆலை துவக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
தஞ்சாவூரில் எரிசாராய ஆலை துவக்க எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடசேரி கிராமத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி எரிசாராய ஆலையை துவக்க ஆயத்தமாகியுள்ள டி.ஆர்.பாலுவை கண்டித்தும், இதற்கு உடந்தையாக இருந்து வரும் தி.மு.க., அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.