நீலகிரியில் மேலும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க வேண்டும்: சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் பெய்துவரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீலகிரியில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணுக்குள் புதைந்து இதுவரை சுமார் 40 பேர் பலியான செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டு வந்தாலும், நிவாரண உதவிகள் வழங்கினாலும், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிச்சென்று இழப்புகளிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.