இலங்கை கடற்படையை கண்டித்து ம.ம.க. ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து காரைக்காலில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினரை கண்டித்தும்,
இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக கூறி மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கைது செய்யப் பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டியும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் காரைக்கால் புதிய பஸ் நிலைய வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டுச்சேரி தொகுதி செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.