நோபல் பரிசுக்கு சோனியா பெயர் சிபாரிசு
புகழ்பெற்ற நோபல் பரிசுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பெயரை, சர்வதேச விழிப்புணர்வு நிறுவனம் 7 வது முறையாக சிபாரிசு செய்து இருக்கிறது. உலகில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்ட இவர், சிறந்த சமூக ஆர்வலர். இவர் இந்தியாவுக்காக மட்டும் அல்ல. அன்னை தெரசா போன்று, உலக சமாதானத்துக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடுபட்டு வருகிறார் என்று சர்வதேச அமைப்பு கூறி இருக்கிறது.
எனவே, நோபல் பரிசை தேர்ந்து எடுக்கும் நார்வே நாட்டு குழுவினர், சோனியாவின் பெயரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வற்புறுத்தி இருக்கிறது.