Skip to main content

பயங்கரவாதத்தை ஒழித்த லட்சணம் இதுதானா, மோடிஜீ?

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

காங்கிரஸ் அரசுக்கு எதிரான மோடியின் கேள்விகள் அனைத்தும், விமர்சனங்கள் அனைத்தும் இப்போது அவருக்கே பூமராங் ஆக திரும்பிவரத் தொடங்கியுள்ளது.

 

2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது 56 இன்ச் மார்புகொண்ட மோடி பேசிய வீடியோ கிளிப் ஒன்றை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரவில்லை என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

 

Modi

 

அதாவது, 56 இன்ச் மார்பளவு கொண்ட மோடி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார் என்றும், பயங்கரவாதிகளின் நிதி ஆதாரத்தை ஒழித்துவிடுவார் என்றும், எல்லையில் அமைதி நிலவும் என்றும் பில்டப் செய்யப்பட்டிருந்தது. 

 

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சமீபத்தில் சுன்ஜுவான் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலோடு மொத்தம் 207 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று சிங்வி கூறியிருக்கிறார்.

 

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் வெறும் 96 மட்டுமே என்று உள்துறை அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

 


எல்லைப்பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தடுக்கத் தவறிவிட்டார் என்றுகூறி அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வளையல்களையும் புடவைகளையும் அனுப்பியது பாஜக. அதுபோலெல்லாம் காங்கிரஸ் கட்சி இதுவரை தரம்தாழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அதாவது, நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் அந்தக் கட்சி பொறுப்பாக இருப்பதையே இது காட்டுகிறது.

 

சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்தக் கேள்விகளுக்கு பாஜக பதில் சொல்லாது. ஏனென்றால், இந்தக் கேள்விகள் அனைத்தும் பாஜக கேட்டவைதான்.

 

முதல்கேள்வி, பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் எங்கிருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கிடைக்கின்றன. எல்லைக்கு அந்தப்புறம் இருந்து கிடைக்கின்றனவா? அனைத்து எல்லைப் பகுதிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன. எல்லைப் பாதுகாப்புப் படையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன. பிறகு எப்படி அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கின்றன?

 

இரண்டாவது கேள்வி, பயங்கரவாதிகளுக்கு எப்படி நிதி கிடைக்கிறது. மொத்த பணபரிவர்த்தனை அதிகாரமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது. பிறகு ஏன் பிரதமர் மோடியால் தீவிரவாதிகளின் பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்க முடியவில்லை? பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகளின் நிதி ஆதாரத்தை அழித்துவிட்டதாக மோடி சொன்னது என்னாயிற்று?

 

அதாவது நாட்டின் எல்லைகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கடலோர பாதுகாப்பும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எல்லைப் பாதுகாப்புப் படையும், கடற்படையும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. பிறகு எப்படி பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவுகிறார்கள்?

 

பயங்கரவாதிகளின் போன்களையும், ஈமெயில்களையும் குறுக்கிட்டு உளவறியும் ஆற்றலை இந்த அரசு இழந்துவிட்டதா? என்றெல்லாம் கேட்டால், மவுனம்தான் விடையாக கிடைக்கிறது. பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது பாஜக. அதேசமயம், கேள்வி கேட்பவர்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுத்து, தன்னைத்தானே பெருமை பீற்றிக் கொள்கிறது என்று காங்கிரஸ் காட்டமாக பேசத் தொடங்கியிருக்கிறது.

 

தான் விதைத்த வினையை தானே அறுக்கும் நிலைக்கு பாஜக வந்திருக்கிறது.

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.