Skip to main content

ஜெயலலிதா, மம்தா, மாயாவதி... இவர்களுக்கெல்லாம் முன்னோடி இவர்!

Published on 18/03/2018 | Edited on 18/03/2018

 

Suchetha kirupalini


சுதந்திரத்துக்கு முன்பும், சுதந்திரத்துக்கு பின்பும் எண்ணற்றோர் இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்தியாவில் முதன் முதலில் ஒரு பெண் முதலமைச்சரானது இன்றளவும் சர்ச்சைக்குரிய மாநிலமாக உள்ள உத்திரபிரதேசத்தில் தான்.

இன்றைய ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா என்ற இடத்தில் வசித்த அப்பகுதியின் பிரபல மருத்துவர் மஜும்தரின் மகளாக சுசேதா 1908 ஜுன் 5ந்தேதி பிறந்தார். அம்பாலாவில் உயர்கல்வியை கற்ற பின் பட்டப்படிப்புக்காக டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டமும், பின்னர் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார். படித்து முடித்ததும் அவருக்கு பனாரஸ் இந்துக்கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. பணியில் சேர்ந்து கல்வி கற்பிக்கும் வேலையில் இருந்தார்.

1936ல் காந்தியின் அகிம்சைவழி போராட்டவாதியும், சோசியலிச தலைவருமாக அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆச்சார்யா கிருபளானியை திருமணம் செய்துக்கொண்டார். அது முதல் இவரது வாழ்க்கை பாதை மாறத்துவங்கியது.

சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கொண்டவர் காந்தி தலைமையிலான காங்கிரஸில் இணைந்து கொண்டார். பெண்களை திரட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டுவந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்வு வாழ்ந்த சுசேதா, காங்கிரஸில் மகளிர் பிரிவை தொடங்கி போராட்டக்களத்துக்கு அனுப்பிவைத்தார். அந்த பெண்கள் பிரிவே பின்னர் மகிளா காங்கிரஸ் என மாறியது.

பெண்கள் தைரியமாக வாழவும், தங்களுக்கு ஆபத்து வருகிறது என்றால் தங்களை தற்காத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தான் கற்றிருந்த சிலம்பாட்டம் உட்பட பல ஆயுத பயிற்சிகளை வழங்கினார். அதோடு, தேர்ந்த மருத்துவர்கள் மூலம் மருத்துவ முதலுதவி செய்வதை கற்றுதந்தார். இதன் மூலம் ஆங்கிலேய அதிகாரிகள் சுதந்திர போராட்ட வீரர்களை தாக்கும்போது, காயம்பட்ட போராளிகளுக்கு முதலுதவியை சுதந்திரபோராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் படையே செய்ய முடிந்தது.
 
 

Suchetha kirupalini meet to Internation woman leaders



நாடு சுதந்திரம் அடைந்த போது சுதந்திர இந்தியாவின் முதல் அவையில் வந்தே மாதரம் பாடியவர் சுசேதா. சுதந்திரத்துக்குப் பின் பிரதமர் நேருவால், ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய பிரதிநிதியாய் நியமிக்கப்பட்டார். அதோடு, காந்தியின் நவகாளி அமைப்பின் போராட்டத்தில் கலந்துகொண்டு யாத்திரை சென்றார் சுசேதா.

1952ல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக, கட்சியின் தலைவராக இருந்த ஆச்சார்யா கிருபளானி அக்கட்சியில் பிரதமர் நேருவுடன் முரண்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதியதாக கிசான் மஸ்தூர் பிரஜான் பார்ட்டி என விவசாயிகள் பெயரை முன்வைத்து ஒரு கட்சியை உருவாக்கினார்.

இது அவரது மனைவிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சுசேதா போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 1961ல் மாநில அமைச்சராக பதவியேற்று அந்த பதவியில் இருந்து வந்தார். 1963 அக்டோபர் 2ந்தேதி உத்திரபிரதேச முதலமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டார் சுசேதா. உத்திரபிரதேசத்தின் நான்காவது முதலமைச்சராக பதவிக்கு வந்தார். நான்காவதாக முதல்வர் பதவிக்கு வந்தாலும் உ.பியின் முதல் பெண் முதலமைச்சர் இவர் தான். அதோடு இந்தியாவில் முதன் முதலாக பெண் ஒருவர் முதலமைச்சரானது உத்திரபிரதேசத்தில் தான் என்பது குறிப்பிடதக்கது. 1967 மார்ச் 13ந்தேதி வரை அந்த பதவியில் இருந்தார்.

தனது 66வது வயதில் 1974 டிசம்பர் 1ந்தேதி மறைந்தார். அவர் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் என்கிற பெயரை பெற்று வரலாற்றில் இடம்பிடித்தாலும் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் உள்ள உத்திரபிரதேச மாநில முதலமைச்சராக சுசேதா இருந்தாலும் பெரிய அளவில் எதையும் சாதிக்கவில்லை என்பதால் அவர் பெயர் வரலாற்றில் மங்கியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.